Friday, November 16, 2007

தொடக்க விழா

தொடக்க விழா

எண்ணங்களின் சிதறல்கள்
அனுபவங்களில் முத்துக்கள்
இத்தனையும் புதைந்து, மறைந்து போக வேண்டுமா?
ஆதங்கத்தின் ஓசை கேட்டுவிட்ட பாரதி
ஓடி வந்தான்.
பரிசொன்றும் தந்தான்.
சிமிழ்
மனச் சிமிழ்
“இதிலே வைத்தால் ?”
“உன் சந்தேகம் புரிகின்றது.
இதன் மணம் தேடி வருவார்கள்.
உள்ளே நான் இருக்கின்றேனே”
என்று கண்சிமிட்டி உட்புகுந்தான்
என் பாரதி
மனச்சிமிழ் உங்கள் முன்

No comments: